×

எடப்பாடி அருகே உணவகத்தில் வாங்கிய பரோட்டா குருமாவில் பூரான்: உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் உணவகத்தில் போலீசார் ஆய்வு

சேலம்: எடப்பாடி அருகே உணவகத்தில் வாங்கிய பரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை அறியாமல் சாப்பிட்ட இருவர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொங்கணாபுரம் எட்டிகுட்டை மேடு பகுதியில் உள்ள உணவகத்தில் முரளி கிருஷ்ணன், கலையரசன் ஆகிய இருவரும் குருமாவுடன் பரோட்டாவை பார்சல் கட்டிக்கொண்டு வீடுகளில் சாப்பிட்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனே எடப்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் போலீசார் உணவகத்தில் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எடப்பாடி அருகே உணவகத்தில் வாங்கிய பரோட்டா குருமாவில் பூரான்: உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் உணவகத்தில் போலீசார் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Puran ,Parotta ,Kuruma ,Edappadi ,Salem ,Dinakaran ,
× RELATED பரோட்டா சாப்பிட்டவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு